Saturday, September 24, 2005

திருவாசகம் - புற்றில் வாள்..

3. கிளியனார் கிளவி அஞ்சேன் அவர்கிறி முறுவல் அஞ்சேன்
வெளியநீ றாடும் மேனி வேதியன் பாதம் நண்ணித்
துளியுலாம் கண்ணராகித் தொழுதழு துள்ள நெக்கில்
அளியிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.


பொருள்: கிளி போல் பேசும் பெண்களின் மொழி கண்டு அஞ்ச மாட்டேன். அவர்களுடைய வஞ்சகமான (Pope calls it wanton smile) புன்சிரிப்பு கண்டு அஞ்ச மாட்டேன். வெண்மையான திருநீர் அணிந்த மேனியையுடைய அந்தணனின் பாதத்தை அடைந்து கண்களில் நீர் ததும்பி வண்ங்கி உள்ளம் நெகிழும் கனிவு இல்லாதவரைக் கண்டால் ஐயோ/கடவுளே, நாம் பயப்படுவது சொல்ல முடியாத அளவு ஆகும் !!

பதவுரை :
கிளி அனார் - கிளியை ஒத்த பெண்கள்
கிளவி அஞ்சேன் - சொற்களுக்கு அஞ்ச மாட்டேன்
அவர் - அவரது
கிறி முறுவல் அஞ்சேன் - வஞ்சனையுடைய புன்சிரிப்புக்கும் அஞ்ச மாட்டேன்
வெளிய நீறு ஆடும் - வெண்மையான திருநீற்றில் மூழ்கிய
மேனி - மேனியையுடைய
வேதியன் பாதம் நண்ணி - அந்தணனது திருவடியை அடைந்து
துளி உலாம் கண்ணர் ஆகி - நீர்த்துளிகள் சிந்துகின்ற கண்களையுடையவராய்
தொழுது அழுது - வணங்கி அழுது
உள்ளம் நெக்கில் - உள்ளம் நெகிழ்ந்து
அளி இலாதவரைக் கண்டால் - கனிவு இல்லாதவரைக் காணின்
அம்ம - ஐயோ / கடவுளே
நாம் அஞ்சும் ஆறு - நாம் பயப்படுவது சொல்ல முடியாத அளவு ஆகும்

விளக்கவுரை: கிளி போல் பேசும் பெண்களின் மொழி கண்டு அஞ்ச மாட்டேன். அவர்களுடைய வஞ்சகமான புன்சிரிப்பு கண்டு அஞ்ச மாட்டேன்.பெருமானது அருட் கோலத்தைக் கண்டு உருகாதவர்களைக் கண்டால் அஞ்ச வேண்டும் என்கின்றார். துளியுலாம் கண்ணராகித் தொழுதழு துள்ள நெக்கில்- இந்த வார்த்தைகளை பாட்டில் கேட்கும்போது கண்களில் நீர் சொரிய மாணிக்கவாசகர் சிதம்பரத்தில் நிற்பதாக உருவகப்படுத்திப் நாம் பார்க்கலாம்.


4.பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்
துணிநிலா அணியினான்தன் தொழும்பரோடழுந்தி அம்மால்
திணிநிலம் பிளந்துங் காணாச் சேவடி பரவி வெண்ணீறு
அணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.


பொருள்: எல்லா நோய்கள் வந்தாலும் அஞ்ச மாட்டேன். பிறப்புக்கும் இறப்புக்கும் அஞ்ச மாட்டேன். பிறை நிலாவை அணிந்துள்ள சிவபெருமானின் தொண்டர்களோடு சேர்ந்து அந்த திருமால் வலிமையான நிலத்தைப் பிளந்து சென்றும் காண முடியாத சிவனின் திருவடியைத் துதித்து திருநீரு அணியாதவரைப் பார்த்தால், கடவுளே, நாம் பயப்படுவது சொல்ல முடியாத அளவு ஆகும்

பதவுரை:
பிணி எலாம் - எல்லா வகையான நோய்களும்
வரினும் - வந்தாலும்
அஞ்சேன் - அஞ்ச மாட்டேன்
பிறப்பினோடு இறப்பும் அஞ்சேன் - பிறப்புக்கும் இறப்புக்கும் அஞ்ச மாட்டேன்
துணிநிலா அணியினான்றன் - பிறையை அணிகலனாகவுடைய சிவபெருமானது
தொழும்பரோடு அழுந்தி - தொண்டரோடு பொருந்தி
அம்மால் - அத்திருமால்
திணி நலம் பிளந்தும் காணா - வலிமையான நிலத்தை அகழ்ந்தும் காணமாட்டாத
சேவடி பரவி - சிவந்த திருவடியைத் துதித்து
வெண்ணீறு அணிகிலாதவரை - திரு வெண்ணீறு
அணியாதவரைகண்டால் - காணின்
அம்ம - ஐயோ
நாம் அஞ்சும் ஆறு - நாம் பயப்படுவது சொல்ல முடியாத அளவு ஆகும்

விளக்கவுரை:இந்த பாடலில் மாணிக்கவாசகரின் சைவப் பற்று நன்கு வெளிப்படுகிறது. மேலும் இங்கு திருமால் சிவனின் அடியை அறிய விரும்பி வராக அவதாரம் எடுத்து நிலத்தைப் பிளந்து சென்றும் காண முடியாத கதையை இங்கு சொல்கிறார். (Lord Shiva later blessed Lord Brahma and Lord Vishnu in the form of Lingodbhavar.)

தொடரும்..

6 comments:

TJ said...

Kachanindha kongai maadhar kangal veechu bodhilum
achamillai achamillai acham enbadhillaye!!

Bharathiyar was inpsired by Maanickavasagar??

Maayaa said...

ellarum avanga avanga experiencesa solraangalao ennavo!!!

Anonymous said...

nalla irukku
Kudos for this great effort!

Madhu said...

In onr word, excellent!! Really good Priya. Am so glad you've taken the initiative. Will blogroll this page soon. :)

Maayaa said...

Thanks Dubukku and madhu!!

Badhri said...

If I am allowed to make a suggestion, I think one pAdal per blog will be easier on you and smaller for a blog.

Also if you notice, both the shivites and the vishnavites believed in those days that there is no other god except Shiva or Vishnu respectively. A little sad, but heartening considering where we stand today. Now we are a larger society with people of different beliefs coming under a single umbrella. (meaning there is not as much divide btw shivites and vish'tes). There is a school of thought that globalization will create global societies in which people from different countries come under a single society. It seams the past, present and the future lies in a straigt line! Any thoughts?

PS: Enable comment verification, Damn it! ;-)