Monday, February 27, 2006

பாம்புக்கும் எலுமிச்சைக்கும்

பாம்புக்கும் எலுமிச்சம் பழத்துக்கும்:
முன்னுரை (Introduction): காளமேகப் புலவர் திருமலைராயன் எனற சிறப்பு வாய்ந்த மன்னனிடம் சென்று பாடிப் பரிசு பெறலாம் என்று எண்ணி அவரைக் காண வருகிறார். வழியில் வளமான அவன் நகரத்தைப் பார்த்து பூரித்து அரண்மனை வந்தடைந்தார். அரண்மனையில் திருமலைராயனோ தன் அரண்மனைக் கவிஞர்களின் (தண்டிகைப்புலவர் ம்ற்றும் பலர்) வயப்பட்டு காளமேகப்புலவரை சரியாக மதிக்கவில்லை. இருக்கை அளிக்காமல் இருக்க காளமேகப்புலவர் சரஸ்வதியைத் துதிக்க அரசனின் சிம்மாசனம் வள்ர்ந்து புலவருக்கு இடமளித்தாக வரலாறு. அதையும் பொருட்படுத்தாது புலவரோ தன் கவித்திற்னைக் காட்டி அவையை ஆச்சர்யப்படுத்தி அவர்களின் தவரை உணரவைக்க எண்ணினார். அப்போது தண்டிகைப்புலவர் சிலேடைப் பாடக் கோரி தலைப்பு (i mean topic, say, here paampum elumicchaiyum) அளிக்க காளமேகப்புலவர் உடனடியாகப் பாடியவை.

மக்களே !!! என் எழுத்தோ, வரிகளோ புரியவில்லை யென்றாலோ / தவறாக இருந்தாலோ மன்னித்து / கருத்து பரிமாணம் செய்ய தங்களை வேண்டுகிறேன்.

பெரிய விடம் சேரும் பித்தர் முடிஏறும்
அரியுண்ணும் உப்பும் மேலாடும் - எரிகுணமாம்
தேம்பொழியும் சோலைத் திருமலைராயன் வரையில்
பாம்பு எழுமிச்சம் பழம் !!



தேன் பொழியும் சோலையுடைய திருமலைராயனின் மலைச்சாரலில் பாம்பும் எழுமிச்சம் பழம் போன்றதாகும்

எப்படியென்று (ஒரே வரிக்கு உள்ள இரு அர்த்தங்களைப்) பார்ப்போம்!!!
பாம்பு:
பெரிய விடம் சேரும் - மிகுதியான விஷம் உடையாதாயிருக்கும்
பித்தர் முடிஏறும் - பித்தனான சிவனின் திருமுடியில் இருக்கும்
அரி யுண்ணும் - காற்றை புசிக்கும் (உண்ணும்)
உப்பும் -அதனால் உடல் உப்பி இருக்கும்
மேலாடும் - மேலாக தலை தூக்கி ஆடும்
எரிகுணமாம் - சினமுடைய குணத்தினை உடையதாயிருக்கும்
தேம்பொழியும் சோலைத் திருமலைராயன் வரையில்
பாம்பு எழுமிச்சம் பழம் !!
எலுமிச்சை:

பெரிய விடம் சேரும் - பெரியவர்களிடத்து கொடுக்கப்பட்டு சேர்ந்து இருக்கும் பித்தர் முடிஏறும் - பித்தனின் (சித்த ப்ரம்மை பிடித்தவனின்) தலையில் தேய்க்கப்படும்
அரியுண்ணும் உப்பும் மேலாடும் - (ஊறுகாய் செய்யும் போது) அரியப்பட்டு உப்பு மேல் தூவப்பட்டிருக்கும்
எரிகுணமாம் - அதன் சாறு பட்டால் எரியக்கூடிய தன்மை கொண்டது !!

தேம்பொழியும் சோலைத் திருமலைராயன் வரையில்
பாம்பு எழுமிச்சம் பழம் !!

Tuesday, February 21, 2006

காளமேகமாய் சிலேடை!!!

நண்பர்களே!!
வெகுநாட்களுக்குப் பிறகு இங்கு சந்திக்கிறோம்!! இன்னும் இத்தளத்திற்கு வந்து "எதாவது பதிவு உள்ளதா?" எனப் பார்க்கும் நேயர்களுக்கு என் மனமார்ந்த நன்றி!!

ஆத்திசூடிக்குப் பிறகு மற்றொரு நல்ல இலக்கியத்தைப் பற்றியோ (அ) அதற்கு மொழிபெயர்ப்போ செய்ய வேண்டுமென்ற அவா ஒருபுறமிருக்க, ஆராய்ச்சி வேலை மற்றொரு புறம் இழுக்க நான் வேலைக்கு முக்கியத்துவம் த்நதேன்.எழுத வேண்டுமெனற ஆசையை (படிக்காமல்/உழைக்காமல் ) குட்டிப்ரியா தளத்தில் எழுதி தீர்த்துக் கொண்டேன. நீண்ட இடைவேளைக்குப் பிறகு, சென்ற வாரம், சில நூல்களைப் புரட்டிப் பார்த்தேன். ஆனால், சொந்தமாக மொழிபெயர்க்க நிறைய நேரமும், கடும்உழைப்பும், விடாமுயர்ச்சியும் தேவை என்று உணர்ந்தேன.அது இப்பொழுது முடியாது என்று வருந்திக் கொண்டிருக்க, வாசகர்களுக்கு "நாம் படித்த (அ) படிக்கின்ற சிலவற்றைச் சொல்லலாமே" எனறு தோன்றியது. அதன் விளைவே இந்த (ம) பின்வரும் பதிப்பு (கள்)!!

"கவிஞர்கள் எல்லோரும் மேதாவிகள்!! அவர் போல் (அ) இவர் போல் என்னால் எழுத முடியவில்லையே! முடியவும் முடியாது!!"
- என்னைப பொருத்த வரை இவை சரியான கருத்து - ஆனால் தவறான சிந்தனை!! ஏனெனில் கவிஞன் பிறப்பதில்லை - உருவாக்கப்படுகின்றான் ! காலமும், சூழ்நிலையும், சுற்றுப்புறமும் உதவ ஒரு சராசரி மனிதன் கவிஞனாகின்றான்! கவிஞர்களின் எழுத்துகளில் தனித்துவம் இருப்பதால் தான் ஒவ்வொருவரும் அவரவர் வழிநடையின் மூலம் சிறப்பு பெருகின்றனர். யாரும் மற்றொருவர் போல் எழுத முடியாது!! எழுதவும் தேவையில்லை!!!

கவிஞர் எனறதும் என் நினைவுக்கு வருபவர் பாரதியே !! அவர் பாடல்கள் உண்மையை கக்கும் ; எதார்த்தம் நேரே நெஞ்சில் வேலாய்ப் பாயும் (point blankaa) . அதைக் படித்து, சொல்ல முடியாத இன்பத்தில் பல நாட்கள் திளைத்துள்ளேன்!! அதனால் மற்ற கவிஞர்களின் எழுத்தை ரசிக்காமல் இல்லை..பாரதிதாசனின் பாட்ல்களில் அன்பும் பாசமும் தேனாய்ப்பாயும் விதமும் ஒர் தனி அழகே . மாணிக்கவாசகரின் பாடலோ மனத்தை உருக்கும் பக்தியைக் காட்டும் !!

இப்படி எனக்குப் பிடிதத நிறைய கவிஞர்களில் காளமேகப் புலவரும் ஒருவர். அவரைப் பற்றி நினைத்தாலே அவரின சிந்தனைச்சிறப்பே நினைவுக்கு வருகிறது. தமிழ்ப்புத்தகத்தில் எழாம்-எட்டாம் வ்குப்பில் படித்த "காக்கைக்கா காகூகை" என்ற பாடலினால் சொக்கி இழுக்கப்பட்டு, சுய சம்பாத்தியம் பெற்றதும் அவரின் தனிப்பாடல் நூலை வாங்கிப் படித்தேன். இன்றும் நாளையும் திரும்பப் படிக்கிறேன்.அவ்வளவு புத்துணர்ச்சி அவர் சிந்தனையில் - அவர் சொற்களில்!! . அவருடைய வரலாற்றை உங்களுக்குச் சொல்ல அள்வளாது ஆசை இருப்பினும், அவரின் கவிதைகளைப் பற்றிப் பேச, அதன் சுவையை உங்களுடன் பகிர எண்ணும் ஆசையே விஞ்சி இருக்கிறது!!
அடுத்து வரும் பதிவுகளில் அவருடைய கவிதைகளில் ஒரு வகையான சிலேடைக் கவிதைகளைகளையும் அதன் பொருளையும் பதிக்க எண்ணியுள்ளேன். உங்களின் ஆர்வத்தைத்/எண்ணத்தை தெரிவியுங்கள்!!பிடித்திருந்தால் மேலும் சிலவற்றைக் சொல்ல விரும்புவேன்.(தமிழில் பதிவு செய்வது மிகவும் பொறுமையைக் சோதிக்கின்றது. ஆனால் தமிழில் படித்தால்(/அதுவும் நம் பதிவை தமிழில் படிக்க விரும்புகிறார்கள் என்று அறிந்தால்) ஒரு தனி இன்பம் தான்.

சிலேடை : சொல் அமைப்பில் ஒரு சொல்லாக வந்தாலும் இரண்டு (அ) மூன்று பொருளுடன் விளங்கும் கவிதை சிலேடை எனப்படும் !
காளமேகப்புலவரின் கவிதைகளில் சிலேடை எனக்கு மிகவும் பிடிதத ஒன்று. எனெனில், அது மிக எளிதாகவும் (எல்லொரும் புரிந்துகொள்ளலாம்), அவரின் சிந்தனைச் சிறப்பை விளக்கக் கூடியதாகவும் விளங்கும் (Man!! he has a great thinking capability and he could use it effectively in tamil words .I am so impressed and I respect his intellect..Hats off ).

அடுத்த பதிவில் தான் பாருங்களேன்!!!!