Wednesday, January 25, 2006

ஆத்திசூடி - 17

101. வித்தை விரும்பு
கற்பதிலே ஆர்வம் கொள்வாயாக

102. வீடு பெற நில்
நற்கதி அடையும் காரியங்களைச் செய்வாயாக

103. உத்தமனாய் இரு
உலகத்தவருடன் நல்லவனாக நடந்து கொள்

104. ஊருடன் கூடி வாழ்
ஊர்மக்களுடன் ஒற்றுமையாக வாழ்க்கை நடத்துவாயாக

105. வெட்டெனப் பேசேல்
வருத்தம் உண்டாகுமாறு கத்தி வெட்டைப் போல பேசாதே

106. வேண்டி வினை செயேல்
உன் நன்மைக்காக வேண்டுமென்றே தீய காரியங்களைச் செய்யாதே

107. வைகறைத் துயில் எழு
அதிகாலையில் எழுந்திரு

108. ஒன்னாரைத் தேறேல்
பகைவர்களை நம்பாதே

109. ஓரம் சொல்லேல்
நேர்மை தவறி ஒரு பக்கம் பேசாதே!!
முற்றும்

Friday, January 20, 2006

ஆத்திசூடி - 16

91. மீதூண் விரும்பேல்
மிகுதியாக உண்ண விரும்பாதே
92. முனைமுகத்து நில்லேல்
போர்/ சண்டை நடக்கும் இடத்தில் முதலில் சென்று நிற்காதே
93. மூர்க்கரோடு இணங்கேல்
முரடர்களோடு சேராதே
94. மெல்லி நல்லாள் தோள்சேர்
உனக்குரிய மனைவியோடு மட்டும் வாழ்க்கை நடத்து
95. மேன்மக்கள் சொல் கேள்
நல்லொழுக்கமுள்ள பெரியாரின் சொல்லைக் கேட்பாயாக
96. மை விழியார் மனை அகல்
விலைமாதர் இல்லத்தை விட்டு நீங்குவாயாக
97. மொழிவது அற மொழி
பேசும் சொற்களை சந்தேகம் இல்லாதவாறு பேசுவாயாக
98. மோகத்தை முனி
காம ஆசைகளை விட்டொழிப்பாயாக

வகர வருக்கம்

99. வல்லமை பேசேல்
உன்னுடைய ஆற்றலை நீயே புகழ்ந்து பேசாதே

100. வாது முற்கூறேல்
வாக்குவாதம் வருவதற்குரிய சொற்களை நீ முன்னால் பேசாதே
தொடரும்..

Monday, January 16, 2006

ஆத்திசூடி - 15

81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
உன்னைப் புகழ்ந்தவரை நீயும் போற்றிவாழ்வாயாக
82. பூமி திருத்தி உண்
நீலத்தை பண்படுத்தி பயிரிட்டு வாழ்வாயாக
83. பெரியாரைத் துணைக் கொள்
அறிவாற்றலில் உன்னைவிட சிறந்தவரைகளையே துணையாகக் கொள்வாயாக
84. பேதைமை அகற்று
அறிவற்ற செயல்களை விட்டொழிப்பாயாக

85. பையலோடு இணங்கேல்
சிறுபிள்ளைத்தனம் உள்ளவர்களோடு இணங்காதே
(project madurai online says 'Dont move with Idiots'. But raamasamy pulavar says 'paiyal' as small children. I think paiyal as people with small qualities )

86. பொருடனைப் போற்றி வாழ்
செல்வம் அழிந்து போகாமல் காத்து வாழ்வாயாக

87. போர்த் தொழில் புரியேல்
போர் புரிவதை ஊக்குவிக்காதே

மகர வருக்கம்

88. மனம் தடுமாறேல்

எத்தகைய நிலையிலும் கலக்கம் அடையாதே

89. மாற்றானுக்கு இடம் கொடேல்
பகைவனுக்கு இடம் அளிக்காதே

90. மிகைபடச் சொல்லேல்
உரையாடும் போது எதையும் மிகைப்படுத்திக் கூறாதே/ குற்றம் உண்டாகுமாறு பேசாதே
தொடரும்

Wednesday, January 11, 2006

ஆத்திசூடி - 14

71. நூல் பல கல்

பல விதமான கலைகளையும் கற்பாயாக

72. நெற்பயிர் விளைவு செய்

நெற்பயிரை பயிரிடுவயாக!

73. நேர்பட ஒழுகு

தவறான வழியிலேயே செல்லாமல் நேர்மையான வழியிலே நடப்பாயாக

74. நைவினை நணுகேல்

உன்னையோ பிறரையோ வருத்தக்கூடிய காரியங்களைச் செய்யாதே

75. நொய்ய உரையேல்

இழிவான மொழிகளைப் பேசாதே

76. நோய்க்கு இடம் கொடேல்

நோயுண்டாவதற்கு இடங்கொடுக்காதே

பகர வருக்கம்

77. பழிப்பன பகரேல்

பிறர் இகழ்ந்துரைக்கத்தக்க மொழிகளைப் பேசாதே

78. பாம்பொடு பழகேல்

பாம்பை வளர்த்து அதனுடன் பழகாதே

79. பிழைபடச் சொல்லேல்

பேசுவதில் குற்றம் உண்டாகுமாறு பேசாதே

80. பீடு பெற நில்

பெருமையுண்டாகுமாறு நல்வழியிலே நடப்பாயாக
தொடரும்..

Monday, January 09, 2006

ஆத்திசூடி - 13

61. தெய்வம் இகழேல்
தெய்வத்தை இழிவாகப் பேசுதல் கூடாது

62. தேசத்தோடு ஒட்டி வாழ்.
உன்னுடைய நாட்டு மக்களோடு ஒற்றூமையாக வாழ்வாயாக !
63. தையல் சொல் கேளேல்.
பெண்களின் தீய சொற்களைக் கேட்டு நடக்காதே !

64. தொன்மை மறவேல்.
பழமையான ந்ட்பு, உறவு முதலியவைக்ளை மறந்து விடாதே

65. தோற்பன தொடரேல்.

முடிக்கமுடியாத காரியங்களைத் தொடங்காதே
நகர வருக்கம்
66. நன்மை கடைப்பிடி
நன்மையான காரியங்களைத் தொடர்ந்து செய்வாயாக

67. நாடு ஒப்பன செய்
உன்னுடைய நாட்டிலுள்ளோர் ஒத்துக்கொள்ளக் கூடிய காரியங்களையே செய்.

68. நிலையில் பிரியேல்.
உன்னுடைய கொள்கைகளில் இருந்து பின்வாங்காதே
69. நீர் விளையாடேல்.
தண்ணீரிலே விளையாதே

70. நுண்மை நுகரேல்
(நோய் உண்டாக்கத்தக்க) இழிவு பொருளை உண்ணாதே!
தொடரும்..