Friday, September 23, 2005

திருவாசகம் - புற்றில் வாள்

புற்றில் வாள்..

இது ' அச்சப்பத்து' என்ற பகுதியில் வருகிறது - சிதம்பரத்தில் மாணிக்கவாசகர் பாடியது. இறைவனது திருவருள் நெறிக்குப் புறம்பானவற்றைக் கண்டு அஞ்சிப் பாடியது ஆதலால், அச்சப் பத்து எனப்பட்டது. 'தீயவை தீய பயத்தலால' அச்சம் உண்டாயிற்று என்றார்.

புற்றிள்வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றும்ஓர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்கு
அற்றிலா தவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சு மாறே.


பொருள்:புற்றில் வளைந்து இருக்கும் பாப்பைக் கண்டு அஞ்ச மாட்டேன். பொய் பேசுபவர்களின் உண்மை போன்ற சொற்களைக் கண்டு அஞ்ச மாடேன்.அடர்த்தியான நீண்ட சடையையுடைய பெருமைக்குரிய நெற்றிக்கண்ணைக் கொண்ட எம்பெருமானின் பாதத்தை அடைந்து, வேறொரு தெய்வம் இருப்பதாக எண்ணி எம்பெருமானை போற்றாதவரைப் பார்த்தால், கடவுளே! நாம் பயப்படுவது சொல்ல முடியாத அளவு ஆகும் !!

பதவுரை :
வாள் அரவு - வளைந்து உள்ள கொடிய பாம்பு
அஞ்சேன் - அஞ்சமாட்டேன்
பொய்யர்தம் மெய்யும் - பொய்யர்களது உண்மை போன்ற சொற்களுக்கும்
கற்றை வார்சடை - அடர்த்தியான நீண்ட சடை
எம் அண்ணல் - எம் பெரியோனாகிய
கண்ணுதல் - நெற்றிக்கண்ணையுடைய இறைவனது
பாதம் நண்ணி - திருவடியை அடைந்தும்
மற்றும் ஓர் தெய்வம் தன்னை - வேறொரு தெய்வததை
உண்டு என நினைந்து - இருப்பதாக எண்ணி
எம் பெம்மான் கற்றிலாதவரை - எம்பெருமானைப் போற்றாதவரை
அம்ம - ஐயோ/கடவுளே! (exclamation!!)
நாம் அஞ்சும் ஆறு - நாம் அஞ்கின்ற வகை சொல்ல முடியாத அளவு ஆகும்

விளக்கவுரை:

எம் பெருமானைப் போற்றாதவரை 'கற்றிலாதவர்' என்று சொல்கிறார். பாம்பையே அணியாகப் பூண்டு, ஞானத்தையே கண்ணாகக் கொண்டு உள்ள இறைவன் அடியார், புற்றில்வாழ் அரவத்தையும் பொய்யர்தம் மெய்யையும் கண்டு அஞ்ச வேண்டுவதில்லை.ஆனால், இறைவனது திருவடியை அடைந்தும் பிற தெய்வங்களை வழிபடுவாரைக் கண்டு அஞ்ச வேண்டும் என்கின்றார்.

'எம் பெம்மாற்கு அற்றிலாதவரை' எனப் பிரித்து, எம் இறைவன்பொருட்டுப் பிற பற்றுகள் நீங்காதவரை என்றும் பொருள் கூறலாம்.

இளையராஜாவின் இசையில் 'கற்றிலாதவரை' என்ற இடத்தில் உள்ள அழுத்தம் (stress) மிக அருமையாக இருக்கும். அம்ம - கடவுளே என்று மன்ம் நொந்து கொள்கிறார்.

இதன் மூலம் மாணிக்கவாசகர் தன் ஆழ்ந்த அன்பைத் தெரிவிப்பதோடு மட்டும் இல்லாமல் அவர் ஒரு relgious fanatic/ rebel இல்லை என்பதையும் காட்டுகிறார். ஏன் என்று கேட்கிறீர்களா?? அவர் அவருடைய இளமைக்காலத்தில் (நல்ல சக்தி உள்ள சமயம்) இதைப் பாடும்போதும் 'இறைவனது திருவடியை அடைந்தும் பிற தெய்வங்களை வழிபடுவாரைக் கண்டு அஞ்ச வேண்டும்' என்று தாழ்மையுடன் கூறுகின்றாரே ஒழிய அவர்களை மாற்ற / அடிக்க வேண்டும் என்று கூறவில்லை..

2.
வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்
என்பெலாம் உருக நோக்கி அம்பலத் தாடுகின்ற
என்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா
அன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.


பொருள்: வன்மையான மாமிசம் கொண்ட வேல் கண்டு அஞ்ச மாடேன்; வளையலை அணிந்த பெண்களுடைய கடைக்கண் பார்வைக்கும் அஞ்ச மாட்டேன்; எலும்புகளெல்லாம் உருகும்படியாகப் பார்த்து, பொன்னம்பலத்தில் ஆடுகின்ற, எனது துளையிடப்படாத மாணிக்கத்தைத் துதித்து, அவனது திருவருளை நன்கு நுகர மாட்டாத, அன்பற்றவரைக் காணின், கடவுளே! நாம் பயப்படுவது சொல்ல முடியாத அளவு ஆகும் !!

பதவுரை:
வன்புலால் - வலிமையான மாமிசம்
வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன் -வளையலை அணிந்த பெண்களுடைய கடைக்கண் பார்வைக்கும் அஞ்ச மாட்டேன்
என்பு எலாம் உருக நோக்கி - எலும்புகளெல்லாம் உருகும்படியாகப் பார்த்து
அம்பலத்து ஆடுகின்ற - பொன்னம்பலத்தில்(சிதம்பரத்தில்) ஆடுகின்ற
என் பொலாமணியை ஏத்தி - எனது துளையிடப்படாத மாணிக்கத்தைத் துதித்து
அருள் இனிது பருகமாட்டா - அவனது திருவருளை நன்கு நுகர மாட்டாத, அன்பு இலாதவரைக் கண்டால் - அன்பற்றவரைக் காணின்
அம்ம - ஐயோ/கடவுளே (exclamation)
நாம் அஞ்சும் ஆறு - கடவுளே! நாம் பயப்படுவது சொல்ல முடியாத அளவு ஆகும் !!

விளக்கவுரை:
'எமனைக் கடிந்து காமனை எரித்த சிவபெருமானது அடியார்க்குக் கொடிய வேலும் மாதரது கூரிய பார்வையும் துன்பம் தரமாட்டா' என்பார். அதையே 'வன்புலால் வேலும் அஞ்சேன், வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்' என்றார்.

'ஆனால், அம்பலத்தாடும் பெருமானது இனிமையான பார்வையையும் அழகிய நடனத்தையும் கண்டு அன்புறாதவர்களைக் கண்டால் அஞ்ச வேண்டும்' என்பார் . அதையே 'அம்பலத்தாடுகின்ற என் பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா அன்பிலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறு' என்றார்.

தொடரும்..

Thanks to wiki group and project madurai for having G.U Pope's english tranliteration online !

11 comments:

ranjit kalidasan said...

Too good priya...
vilakkavurai,
padhavurai..
unmaiyilae payan ulladaaga irundhadu..
keep it up

expertdabbler said...

wow! kalakkitta.

indha madhiri ella paatukkum podu. kandippa publish pannalaam.

i wanted a tamil version very badly.

enna madhiri waste pasanga ellam ipdi padicha dhaan undu

Awesome effort!

Maayaa said...

ranjith and prabu,
Thanks.
i thought of doing it myself on my own.. But I found the site given by saravana kumar in my english blog to be extremely useful. I just thought I will compare it with pope's meaning , add my views and make it better.
so , idhu fulla ennnoda words mattum illa!!!
your appreciation really motivated me and i will go ahead!

KRTY said...

oh yes priya.. please Continue the good work.came here thro PK, and wow ! something many of us were needing.

"Thiruvaasagaththukku Urugaar Oru Vaasagaththukkum Urugaar !!" Very True.. :)

Thanks, you made my day.

Maayaa said...

keerthi,
thats really nice to see somebody like me..same here.. you made my day too!!

JP said...

Hello Dear Sister, I love ur translation work for Thiruvasagam. Naandri. Please post more explanation. Keep your good work.

Arutperum jothiyai nammul unara ithu uthavattum...Naandri

Maayaa said...

thanks jp!!
nichayamaa try panren

Sriram said...

Thank you!

Suchithra said...

Hi, i was directed to this site from expertdabbler.com (which i got from google only! :) )I ve no words to praise your work. My knowledge of tamil is only mediocre and i try to make up for my lack of learnin it at school.

Thiruvasagam is a brilliant piece of work which, like Karthik, I also was crazy about, and very badly wanted to read a translation. Though I found books of entire thiruvasagam translated, I did not have the time to search for Ilayaraja's selected verses. And when I found your post, my joy knew no bounds.

Really, there are lots of people who miss a great deal of poetry because they don't understand the language and it is only works like yours that help us enjoy it.. (Not only this post, but the site as such!) Hats off!!

And please go ahead and publish your work... You can be assured I will be among the first to buy! :)

Keep it up!

Johnny said...

தங்கள் சேவைக்கு மிக்க நன்றி

Siva said...

This is very good. I am very grateful to you for the wonderful work. Please do the same for other songs when you have time.