Wednesday, October 12, 2005

ஆத்திசூடி - 12


56. தானமது விரும்பு

தானம் கொடுப்பதற்கு விருப்பங்கொள்வாயாக!!!

57. திருமாலுக்கு அடிமை செய்

காத்தற் கடவுளாகிய திருமாலிடம் அன்புடன் சேவை செய்!!

58. தீவினை அகற்று

தீய செயல்களைச் செய்யாதே!!

59. துன்பத்திற்கு இடம் கொடேல்

துன்பம் வரக்கூடிய செயல்களைத் தவிர்ப்பாயாக!!

60. தூக்கி வினை செய்

செய்யும் காரியத்தின் நன்மை தீமைகளை சீர்தூக்கிப் பார்த்து அதனைச் செய்வாயாக!!

தொடரும்..

No comments: