Sunday, May 07, 2006

வைக்கோலும் மதயானையும்

வாரிக் கள்த்தடிக்கும் வந்துபின் கோட்டைபுகும்
போரிற் சிறந்து பொலிவாகும் - சீருற்ற
செக்கோல் மேனித் திருமலைரா யன்வரையில்
வைக்கோலுமால் யானையாம்


வைக்கோல்
வாரிக் கள்த்தடிக்கும் - அறுவடை செய்வோரால் வாரிக்கொணர்ந்து களத்துமேட்டில் அடிக்கப்படும்
வந்துபின் கோட்டைபுகும் - அது பின் கோட்டைக்குள்ளே சேரும்
போரிற் சிறந்து பொலிவாகும் - பெரிய வைக்கோல் போர்களாக சிறப்புற்று அழகாய் விளங்கும்

மதயானை
வாரிக் கள்த்தடிக்கும் - பகைவர்களைத் துதிக்கையினாலே வாரி போர்க்களத்தில் அடித்துக் கொல்லும்
வந்துபின் கோட்டைபுகும் - பின்னே பகயரசரின் கோட்டைக்குள் புகும்
போரிற் சிறந்து பொலிவாகும் - இவ்வாறாக போர்த்துரையிலே சிறந்து மேன்மையுடையதாய் விளங்கும்

சீருற்ற - சிறப்புற்ற
செக்கோல் மேனித் திருமலைரா யன் - செந்நிறமான மேனியுடைய
வரையில் - மலைச்சாரலிடத்தில்
வைக்கோலுமால் யானை - வைக்கோலும் மதயானை
யாம் - எவ்வாறு எனில்

தொடரும்..

1 comment:

Maayaa said...

roftl.haahaa
vaikovum madhayaanaiyum...