Wednesday, November 23, 2005

திருவாசகம் - பூ ஏறு கோனும்.. நானும்

நானும்என் சிந்தையும் நாயகனுக் கெவ்விடத்தோம
தானுந்தன் தையலுந் தாழ்சடையோன் ஆண்டிலனேல
வானுந் திசைகளும் மாகடலும் ஆயபிரான
தேனுந்து சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ.

தெளிவுரை:
தானும் தன் தேவியான தையல்நாயகியுடன் நீண்ட சடையையுடைய சிவபெருமான் எம்மை ஆட்கொள்ளவில்லையாயின் நானும் எனது உள்ளமும் தலைவனாகிய அவனுக்கு எவ்வளவு தூரத்தில் இருப்போம். ஆகாயமும் திக்குகளும் பெரிய கடல்களும் ஆகிய பெருமானது தேன் ஊரும் திருவடிகளிடத்தே போய் ஊதுவாய், அரச வண்டே!

பதவுரை:

நானும் - யானும்

என் சிந்தையும் - எனது உள்ளமும்

நாயகனுக்கு - தலைவனாகிய அவனுக்கு

எவ்விடத்தோம் - எந்த இடத்தில் இருப்போம் ( எவ்வளவு தூரத்தில்
இருப்போம் )

தானும் தன் தையலும் - தானும் தன் தேவியான தையல்நாயகி

தாழ்சடையோன் - நீண்ட சடையையுடைய சிவபெருமான்

ஆண்டிலனேல் - ஆட்கொள்ளவில்லையாயின்

வானும் - ஆகாயமும்

திசைகளும் - திக்குகளும்

மாகடலும் - பெரிய கடல்களும்

ஆயபிரான் - ஆகிய பெருமானது

தேன் உந்து - தேனைச் சொரிகின்ற

சேவடிக்கே - திருவடிகளிடத்தே

சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக

கோத்தும்பீ - அரச வண்டே!

விளக்கவுரை :

இறைவனே தம்மை ஆட்கொள்ளவில்லையென்றால் தாமும் தம் சிந்தையும் எங்கேயோ இருந்திருக்கும் என்று கூறுகிறார். தையலும் என்பது தையல்நாயகி - வைதீஸ்வரன் கோவில் அம்பாளைக் குறிக்கின்றது.

4 comments:

Anonymous said...

Hats off Priya! Will visit this page often.
Thank you.
Lakshminarasimhan.

Jeevan said...

well writen. veryy nice.

Maayaa said...

thanks lakshmi narasimhan and jeevan

Unknown said...

wonderful. simple