Saturday, November 19, 2005

திருவாசகம் - பூ ஏறு கோனும்.. வைத்தநிதி

வைத்த நிதிபெண்டிர் மக்கள்குலம் கல்விஎன்னும
பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னுஞ
சித்த விகாரக் கலக்கந் தெளிவித்த
வித்தகத் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ.


தெளிவுரை:

ஈட்டி வைத்த செல்வம், மனைவியர் ,புதல்வர், குலம், கல்வி ஆகிய இவையே வாழ்க்கையென்று நம்புகின்ற மாயையில் உள்ள இவ்வுலகத்தில், பிறப்பு இறப்பு என்கின்ற மனோவிகாரத்தால் உண்டாகும் குழப்பத்தை போக்கிய செறிந்த ஞானமுள்ள பரம்பொருளிடம் போய் ஊதுவாய் அரச வண்டே!

பதவுரை:

வைத்த நிதி - ஈட்டி வைத்த செல்வம்

பெண்டிர் - மனைவியர்

மக்கள் - புதல்வர்

குலம் - குலம்

கல்வி - கல்வி

என்னும் - ஆகிய இவையே வாழ்க்கையென்று நம்புகின்ற

பித்த உலகில் - மாயையில் உள்ள இவ்வுலகத்தில்

பிறப்பொடு இறப்பு என்னும் - பிறப்பு இறப்பு என்கின்ற

சித்த விகாரக் கலக்கம் - மனோவிகாரத்தால் உண்டாகும் குழப்பத்தை (Mentally changing state)

தெளிவித்த - போக்கிய

வித்தகத் தேவற்கே - செறிந்த ஞானமுள்ள (wisdom) பரம்பொருள் (mighty Lord)

சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக.

கோத்தும்பீ - அரச வண்டே!

விளக்கவுரை:

நிலையில்லாத பொருள்களாகிய நிதி முதலியவற்றை நிலையுடையது என்று எண்ணும் அறிவு பேதைமையாதலால், இவ்வுலகை ‘பித்த உலகு’ என்றார்.

இறைவன் இவ்வறியாமையைப் போக்கி அறிவை வழங்குவாராதலால் ‘சித்த விகாரம் தெளிவித்த வித்தகத் தேவர்’ என்றார்.

வித்தகத்தேவர் என்ற வார்த்தைப் ப்ரயோகம் மிக அருமையாக இறைவனின் சிறப்பை விளக்குகிறது!!

தொடரும்..

4 comments:

Jeevan said...

nalla velakam, very intersting. looking forward for more lines form thiruvasakam. really first time reading these words.

Maayaa said...

thanks jeevan!!

b said...

அருமையான வலைப்பூ பிரியா. இன்றுதான் முதன்முதலாகப் பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.

அன்புடன்,
மூர்த்தி.
www.muthamilmantram.com

Anonymous said...

Priya!

Kothumbi paatirkku artham koduthathukku nandri. Athe pol "poovaar senni mannan" paatirkkum artham tharuveergala? illai engu kedaikkum endru koorungal.
Anbudan