Sunday, March 05, 2006

நாய்க்கும் தேங்காய்க்கும்

ஓடும் இருக்கும் அதனுள்வாய் வெளுத்திருக்கும்
நாடுங் குலைதனக்கு நாணாது - சேடியே
தீங்காயது இல்லா திருமலைராயன் வரையில்
தேங்காயும் நாயும் நேர் செப்பு!!


சேடியே -தோழியே
தீங்காயது இல்லா திருமலைராயன் வரையில் - தீமையில்லாத திருமலைராயன் எல்லைக்குட்பட்ட நாட்டில்
தேங்காயும் நாயும் நேர் செப்பு- தேங்காயும் நாயையும் ஒப்பிடலாம் (எப்ப்டியென்றால்)!!

தேங்காய்:
ஓடும் இருக்கும்- தனக்குள் ஓட்டை உடையது!
அதனுள்வாய் வெளுத்திருக்கும் - உள்ளே வெண்மையாய் தேங்காயைக் கொண்டிருக்கும்
நாடுங் குலைதனக்கு நாணாது - அனைவாராலும் விரும்பப்படும் குலையாய் தொங்குவதற்கும் அது கோணாது

நாய்:
ஓடும் - சிலசமயம் ஓடும்
இருக்கும்- சிலசமயம் இருந்த இடத்தில் நிற்கும்
அதனுள்வாய் வெளுத்திருக்கும் - அதன் வாயில் உட்புறம் வெண்மையாய் இருக்கும்
நாடுங் குலைதனக்கு நாணாது - அதற்கு விருப்பமான குரைத்தல் செய்வதிலே அது வெட்கப்படாது (ஓயாது குரைக்கும்)