Monday, February 27, 2006

பாம்புக்கும் எலுமிச்சைக்கும்

பாம்புக்கும் எலுமிச்சம் பழத்துக்கும்:
முன்னுரை (Introduction): காளமேகப் புலவர் திருமலைராயன் எனற சிறப்பு வாய்ந்த மன்னனிடம் சென்று பாடிப் பரிசு பெறலாம் என்று எண்ணி அவரைக் காண வருகிறார். வழியில் வளமான அவன் நகரத்தைப் பார்த்து பூரித்து அரண்மனை வந்தடைந்தார். அரண்மனையில் திருமலைராயனோ தன் அரண்மனைக் கவிஞர்களின் (தண்டிகைப்புலவர் ம்ற்றும் பலர்) வயப்பட்டு காளமேகப்புலவரை சரியாக மதிக்கவில்லை. இருக்கை அளிக்காமல் இருக்க காளமேகப்புலவர் சரஸ்வதியைத் துதிக்க அரசனின் சிம்மாசனம் வள்ர்ந்து புலவருக்கு இடமளித்தாக வரலாறு. அதையும் பொருட்படுத்தாது புலவரோ தன் கவித்திற்னைக் காட்டி அவையை ஆச்சர்யப்படுத்தி அவர்களின் தவரை உணரவைக்க எண்ணினார். அப்போது தண்டிகைப்புலவர் சிலேடைப் பாடக் கோரி தலைப்பு (i mean topic, say, here paampum elumicchaiyum) அளிக்க காளமேகப்புலவர் உடனடியாகப் பாடியவை.

மக்களே !!! என் எழுத்தோ, வரிகளோ புரியவில்லை யென்றாலோ / தவறாக இருந்தாலோ மன்னித்து / கருத்து பரிமாணம் செய்ய தங்களை வேண்டுகிறேன்.

பெரிய விடம் சேரும் பித்தர் முடிஏறும்
அரியுண்ணும் உப்பும் மேலாடும் - எரிகுணமாம்
தேம்பொழியும் சோலைத் திருமலைராயன் வரையில்
பாம்பு எழுமிச்சம் பழம் !!



தேன் பொழியும் சோலையுடைய திருமலைராயனின் மலைச்சாரலில் பாம்பும் எழுமிச்சம் பழம் போன்றதாகும்

எப்படியென்று (ஒரே வரிக்கு உள்ள இரு அர்த்தங்களைப்) பார்ப்போம்!!!
பாம்பு:
பெரிய விடம் சேரும் - மிகுதியான விஷம் உடையாதாயிருக்கும்
பித்தர் முடிஏறும் - பித்தனான சிவனின் திருமுடியில் இருக்கும்
அரி யுண்ணும் - காற்றை புசிக்கும் (உண்ணும்)
உப்பும் -அதனால் உடல் உப்பி இருக்கும்
மேலாடும் - மேலாக தலை தூக்கி ஆடும்
எரிகுணமாம் - சினமுடைய குணத்தினை உடையதாயிருக்கும்
தேம்பொழியும் சோலைத் திருமலைராயன் வரையில்
பாம்பு எழுமிச்சம் பழம் !!
எலுமிச்சை:

பெரிய விடம் சேரும் - பெரியவர்களிடத்து கொடுக்கப்பட்டு சேர்ந்து இருக்கும் பித்தர் முடிஏறும் - பித்தனின் (சித்த ப்ரம்மை பிடித்தவனின்) தலையில் தேய்க்கப்படும்
அரியுண்ணும் உப்பும் மேலாடும் - (ஊறுகாய் செய்யும் போது) அரியப்பட்டு உப்பு மேல் தூவப்பட்டிருக்கும்
எரிகுணமாம் - அதன் சாறு பட்டால் எரியக்கூடிய தன்மை கொண்டது !!

தேம்பொழியும் சோலைத் திருமலைராயன் வரையில்
பாம்பு எழுமிச்சம் பழம் !!

6 comments:

Vanjula said...

priya, na ethukku oru 100 vatti comment vida try panni, ennoda oru comment koda pathivu agavillai!!! BLOCK PANNITINGALA????
anyways:
nice post.arumaiyana sledai, nalla vilakam. manapadam panna try panren!!mudiyala...
bye
hamsa

Maayaa said...

hamsa..
there was some problem in publishing.. realised later that there was also problem in leaving comments..

thanks for appreciation! naan just paathu colloqial tamila ezhuthinen.. avlothaan

Maayaa said...

Sooper lordu...
idha thaane edhirpaakareenga..sari.. sari solren!!!

Anonymous said...

priya, nalla iruku!
bookmarked ur webpage

-Karthikeyan

rameshrkpm said...

சொற்சுவையும் பொருட்சுவையும்... பொருந்தி உள்ளது.. புலவர் அறிவாளி என்று புலப்படுகிறது.. அருமை.. மிக்க அருமை...

Maayaa said...

thank you karthikeyan


ramesh,
yeh... avar paatuke thani azhagu dhaan