Wednesday, January 11, 2006

ஆத்திசூடி - 14

71. நூல் பல கல்

பல விதமான கலைகளையும் கற்பாயாக

72. நெற்பயிர் விளைவு செய்

நெற்பயிரை பயிரிடுவயாக!

73. நேர்பட ஒழுகு

தவறான வழியிலேயே செல்லாமல் நேர்மையான வழியிலே நடப்பாயாக

74. நைவினை நணுகேல்

உன்னையோ பிறரையோ வருத்தக்கூடிய காரியங்களைச் செய்யாதே

75. நொய்ய உரையேல்

இழிவான மொழிகளைப் பேசாதே

76. நோய்க்கு இடம் கொடேல்

நோயுண்டாவதற்கு இடங்கொடுக்காதே

பகர வருக்கம்

77. பழிப்பன பகரேல்

பிறர் இகழ்ந்துரைக்கத்தக்க மொழிகளைப் பேசாதே

78. பாம்பொடு பழகேல்

பாம்பை வளர்த்து அதனுடன் பழகாதே

79. பிழைபடச் சொல்லேல்

பேசுவதில் குற்றம் உண்டாகுமாறு பேசாதே

80. பீடு பெற நில்

பெருமையுண்டாகுமாறு நல்வழியிலே நடப்பாயாக
தொடரும்..

3 comments:

Anonymous said...

I just came across your interpretation of thiruvasagam song 'puttril vaal'. thanks a million!.

I was just about to hunt for the meaning on the net just before landing here! what a coincidence.

Maayaa said...

Priya said...
Hey
Thats okay!! And thanks for visiting!!

Maayaa said...

thanks ishwar!