Friday, October 21, 2005

திருவாசகம் - பூ ஏறு கோனும்..நானார்

2. நானார் என் உள்ளமார் ஞானங்க ளார் என்னை யாரறிவார்
வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி
ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன்
தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ.


பதப்பொருள்:
நான் ஆர் - நான் என்ன தன்மையுடையவன்?
என் உள்ளமார் ஞானங்கள் ஆர் - என் உள்ளத்தில் நிறைந்த ஞான அறிவு (Wisdom's lessons) என்ன?
என்னை யார் அறிவார் - என்னை யார் அறிந்து கொள்வார் ?
மதி மயங்கி - பேரருள் காரணமாக மனமிரங்கி
வானோர் பிரான் - தேவர்களின் பெருமான் (சிவன்)
என்னை ஆண்டிலனேல் - என்னை ஆட்கொள்ளாவிடில்!!!
ஊன் ஆர் உடைதலையில் - மாமிசம் பொருந்திய உடைந்த தலை ஓட்டில், உண்பலி தேர் -(உண்பலித்து + ஏர்) உண்ணுதற்குரிய பிச்சையை ஏற்கின்ற, அம்பலவன் - அம்பலவாணனது
தேன் ஆர் கமலமே - தேன் ஊறிய தாமரை போன்ற திருவடியின்கண்ணே
சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக
கோத்தும்பீ - அரச வண்டே!

தெளிவுரை: நான் என்ன தன்மையுடையவன்?, என் உள்ளத்தில் நிறைந்த ஞான அறிவு என்ன? என்னை யார் அறிந்து கொள்வார் ? பேரருள் காரணமாக மனமிரங்கி, தேவர்களின் பெருமான் (சிவன்), என்னை ஆட்கொள்ளாவிடில்!!!மாமிசம் பொருந்திய உடைந்த தலை ஓட்டில், உண்ணுதற்குரிய பிச்சையை ஏற்கின்ற அம்பலவாணனது தேன் நிறைந்த தாமரை போன்ற திருவடியின்கண்ணே போய் ஊதுவாயாக!! அரச வண்டே!

விளக்கவுரை: 'இறைவன் ஆட்கொண்டமையால் தான் தம்மை தாமே அறிந்து கொள்ள முடிந்தது' என்றும் 'தான் அதனால் பெற்ற ஞானமும் வெளிப்பட்டது' என்றும் கூறுகிறார் மாணிக்கவாசகர். கடவுள், பேரருள் காரணமாக மனமிரங்கி தன்னை ஆட்கொண்டார். அதன் மூலம் தான் அடைந்த ஞானம் வெளிப்பட்டது என்றும் மாணிக்கவாசகர் கூறுவதால் அவரின் வினயமும் இங்கு வெளிப்படுகிறது. 'மதி மயங்கி வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல்' என்று படித்தால் பொருள் சால சிறப்பாக அமையும்!!

தேன் ஆர் கமலமே - தேன் ஊறிய தாமரை போன்ற திருவடியின்கண்ணே என்பதன் மூலம் அவர் திருவடி அவ்வளவு இனிமையாக இருக்கும் என்கிறார். தேனார் கமலமே- பண்பு ஆகுபெயர்.

ஆகுபெயர்:- ஒரு சொல் அதன் பொருளைக் குறிக்காமல் அதனொடு தொடர்புடைய பொருளைக் குறிப்பது ஆகுபெயர் ஆகும். இந்த ஆகுபெயர் 19 வகைப்படும். பெரும்பாலும் வழக்கில் பயன்படுத்தப்படுபவை பொருளாகுபெயர் (thing) , இடவாகுபெயர் (place), பண்பாகுபெயர் (quality) , உவமையாகுபெயர் (comparison) , தானியாகுபெயர் (dont remember!!!)

eg:
தாமரை சேவடி - தாமரை போன்ற மென்மையான சேவடி - lotus like softness - பண்பு ஆகுபெயர்
வெள்ளை அடித்தான் - வெண்மையான சுண்ணம் குறிக்கிறது - white denoting sunnaambu - பொருள் ஆகுபெயர்
பாவை வந்தாள் - சிலைபோன்ற பெண்ணைக் குறிக்கிறது - art like beautiful girl - உவமை ஆகுபெயர்

Thursday, October 13, 2005

திருவாசகம் - பூ ஏறு கோனும்...

திருக்கோத்தும்பி - தில்லையில் அருளிச் செய்தது

கோத்தும்பி என்பது அரச வண்டு என்று பொருள்படும். அரச வண்டை அழைத்து, ‘இறைவன் திருவடிக்கமலத்தில் சென்று ஊதுவாய்’ என்று கூறுவது போலப் பாடப்பட்டுள்ளது இப்பகுதி.

Pope's explanation on Kothumbi: Our poet-sage, like S. Anthony of Padua, and some other medieval saints, had a great sympathy with the irrational creation. This poem is addressed to the humming bee, or winged beetles, which abound in all the topes and glads of South India, and are especially numerous in the shady groves that surround the temples;having a great preference for the fragrant and beautiful trees which are sacred to the Hindu deities. The insect, here called Kottumbi, is probably the dragon-fly Ruplea Spenders. Here the SOUL is really addressed and exhorted to seek Civa's feet.

1.
பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைநத
நாயேறு செல்வியும் நாரணனும் நான்மறையும
மாயேறு சோதியும் வானவருந் தாமறியாச
சேயேறு சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ.


தெளிவுரை:
தாமரை மலரில் ஏறி அமர்ந்துள்ள பிரம்மனும், இந்திரனும், அழகு/ஜொலிப்பு கொண்ட கற்றவர்களின் நாவின் மேல் அமர்ந்துள்ள சரஸ்வதியும், நாராயணனும், நான்கு வேதங்களும், சிறப்பு மிகுந்த ஓளி வடிவும் , வானவர்களும் தாம் அறியமுடியாத, ரிஷப (இடப) வாகனத்தில் ஏறும் சிவபெருமானின் திருவடியின்கண் சென்று ஊதுவாய், அரச வண்டே !!

பதவரை:
பூ ஏறு கோனும் - தாமரை மலரில் ஏறி அமர்ந்துள்ள பிரம்மனும்,
புரந்தரனும் - இந்திரனும்,
பொற்பு அமைந்த - அழகு/ஜொலிப்பு அமைந்த,
நா ஏறு செல்வியும் -கற்றவர்களின் நாவின் மேல் அமர்ந்துள்ள சரஸ்வதியும், நாரணனும் - திருமாலும்,
நான்மறையும் - நான்கு வேதங்களும்,
மா -பெருமை
வேறு சோதியும் - மிகுந்த ஒளி வடிவும்/ wiki books says வடிவினனாகிய உருத்திரனும்,
வானவரும் - தேவர்களும்,
தாம் அறியா - தாம் அறியாவொண்ணாத,
சே ஏறு சேவடிக்கே - இடப வாகனத்தில் ஏறுகின்ற சிவபெருமானுடைய திருவடிக் கண்ணே,
சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக
கோத்தும்பீ - அரச வண்டே!

விளக்கவுரை:
தாமரைப்பூவின் மேல் அமர்ந்துள்ள அரசன் போன்றவன் ப்ரம்மா.

நாயேறு செல்வி-அறிவில் சிறந்தவர்கள் தங்கள் சிறப்பை பேசும் வார்த்தைகளில் வெளிப்படுத்துவர். அவ்வார்த்தைகள் நம் நுணி நாக்கு மேல் அன்னத்தைத்(roof of the mouth) தொடும்போதே வரும். அறிவிற்கு அதிபதியான சரஸ்வதி அத்தகைய சிறந்தவர்களின் நுணிநாக்கின் மேல் ஏறி அமருவாள் என்பதைக் குறிக்கும் வண்ணன் உள்ளது என்று நான் கருதுகிறேன்.

மாயேறு சோதி - மிகுந்த ஒளி வடிவும்/ wiki books says வடிவினனாகிய உருத்திரனும் (Rudra is a form thought to be God of Power. May be thats why they refer Jothi/power to Rudra..But I never understood so until I crosschecked my interpretation with their's.

சேவடிக்கு+ஏ என்பதை சேவடியின் கண் என்று மாற்றிக் கொள்க. (4ஆம் வேற்றுமை உருபு 7ஆம் உருபாக மாற்றிக் கொள்க)

( வேற்றுமை உருபு பற்றி படித்தது நினைவுக்கு வருகிறதா !!!அதாவது ஒரு சொல் இயல்பாக இல்லாமல் பொருள்படுவதற்காக மாறுபட்டு ஒரு உருபைச் சேர்த்து வரும் . அதுவே வேற்றுமை உருபு ஆகும்.

ஐ - 2ஆம் வேற்றுமை உறுபு eg: இராமனைக் கண்டேன்
ஆல் - 3ஆம் '' eg: இராமனால் ..
கு - 4ஆம் '' eg: இராமனுக்கு..
இன் - 5ஆம் '' eg: இராமனின்..
அது - 6ஆம் '' eg:இராமனது..
கண் - 7ஆம் '' eg: இராமனின் கண் ..)

MAANIKKAVASAGAR learned english I guess,,, adhaan avar "senrroodhai 'GO'thumbi"nnu paaditaaro..Just kidding :)

Wednesday, October 12, 2005

ஆத்திசூடி - 12


56. தானமது விரும்பு

தானம் கொடுப்பதற்கு விருப்பங்கொள்வாயாக!!!

57. திருமாலுக்கு அடிமை செய்

காத்தற் கடவுளாகிய திருமாலிடம் அன்புடன் சேவை செய்!!

58. தீவினை அகற்று

தீய செயல்களைச் செய்யாதே!!

59. துன்பத்திற்கு இடம் கொடேல்

துன்பம் வரக்கூடிய செயல்களைத் தவிர்ப்பாயாக!!

60. தூக்கி வினை செய்

செய்யும் காரியத்தின் நன்மை தீமைகளை சீர்தூக்கிப் பார்த்து அதனைச் செய்வாயாக!!

தொடரும்..

Monday, October 10, 2005

ஆத்திசூடி - 11

51. சேரிடம் அறிந்து சேர்
நீ சேருகின்ற இடத்தின் தன்மையறிந்து சேர்!
52. சையெனத் திரியேல்
பார்ப்பவர்கள் சீ என்று வையுமாறு நடந்து கொள்ளாதே!
53. சொற் சோர்வு படேல்
நீ பேசுகின்ற பேச்சு எடுபடாதவாறு தொய்வுடன் பேசாதே!
54. சோம்பித் திரியேல்
(again, I hear this at my home often from people, aiming at me)
எத்தகைய வேலையும் செய்யாமல் சோம்பலுடன் திரியாதே!

தகர வருக்கம்
55. தக்கோன் எனத் திரி
உன் ஒழுக்கத்தைப் பார்ப்பவர்கள் ' இவன்/ள் நல்லவன்/ள்' என்று சொல்லுமாறு நட!
விரைவில் திருவாசகத்தின் அடுத்த பாடல்....

Sunday, October 09, 2005

ஆத்திசூடி - 10

46. சித்திரம் பேசேல்
வீணான மொழிகளைப் பேசாதே!

47. சீர்மை மறவேல்
சிறப்புக்குக் காரண்மான செயல்களைச் செய்வதற்கு மறவாதே!

48. சுளிக்கச் சொல்லேல்
கேட்பவர்கள் வெறுப்படையும்படியான/க மொழிகளைப் பேசாதே!

49. சூது விரும்பேல்
சூதாடுதலிலே விருப்பங் கொள்ளாதே!

50. செய்வன திருந்தச் செய்
(I hear this from my mom always - Dhenam Thittu vanguven!!)
நீ செய்கிற காரியங்களை செப்பமுறச் செய்வாயாக!!
தொடரும்..

Saturday, October 08, 2005

ஆத்திசூடி - 9

41. கொள்ளை விரும்பேல்
பிறருடைய பொருளுக்கு ஆசைபடாதே!
42. கோதாட்டு ஒழி
குற்ற்ம் பொருந்திய விளையாட்டை விட்டுவிடு!
43. கெளவை அகற்று
மற்ற்வர்களைப் பற்றீ கேவலமாகப் பேசாதே!

சகர வருக்கம்

44. சக்கர நெறி நில்
அரசனுடைய ஆட்சி முறைப்படி நட!!
45. சான்றோர் இனத்து இரு
அறிவில் சிற்ந்த பெரியோர்களின கூட்டத்தில் இரு!!

Tuesday, October 04, 2005

ஆத்திசூடி - 8

36. குணமது கைவிடேல்
நல்ல குண்ங்ளை விட்டுவிடாதே!
37. கூடிப் பிரியேல்
நல்லவர்களோடு நட்பு கொண்டு பிறகு பிரியாதே!
38. கெடுப்பது ஒழி
பிறரைக் கெடுக்கும்படியான செயல்க்ளை விட்டு விடு!
39. கேள்வி முயல்
நல்லவர்க்ளின் உரைகளை கேட்க முயற்சி செய்!
40. கைவினை கரவேல்
நீ செய்யும் காரியங்களை பிறர் அறியாமல் மறைக்காதே!
தொடரும்

Saturday, October 01, 2005

ஆத்திசூடி- 7

31 . அனந்தல் ஆடேல்
மிகுதியாகத் தூங்காதே
ககர வருக்கம்
32. கடிவது மற
பிறரோடு கோபமாகப் பேசியதை மற்ந்துவிடு
33. காப்பது விரதம்
உயிர்களைக் காப்பதைக் க்டமையாக எண்ணு
34. கிழமைப்பட வாழ்
உன் பொருள்கள் பிறருக்கு உபயோகப்படுமாறு வாழ்.
35. கீழ்மை அகற்று
இழிவு தரும் குணங்களை நீக்கு
தொடரும்..