Thursday, September 29, 2005

திருவாசகம்- புற்றில் வாள்

6.கோணிலா வாளி அஞ்சேன் கூற்றவன் சீற்றம் அஞ்சேன்
நீணிலா அணியினானை நினைந்து நைந்துருகி நெக்கு
வாணிலாங் கண்கள் சோர வாழ்ந்தநின்றேத்த மாட்டா
ஆணலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.


பொருள்: எங்கும் கோணாது நேரே செல்லும் அம்பு கண்டு அஞ்ச மாட்டேன். எமனது கோபத்துக்கு அஞ்ச மாட்டேன். நீண்ட பிறையாகிய அணிகலனையுடைய சிவபெருமானை எண்ணி, கசிந்து, உருகி, ஒளி பொருந்திய விழிகளில் ஆனந்தக் கண்ணீர் பெருக துதித்து நின்று, புகழ மாட்டாத ஆண்மையுடையரல்லாரைக் காணின், கடவுளே, நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.


பதவுரை:
கோண் இலா - (Pope separates like this) எங்கும் கோணாது நேரே செல்லும்

கோள் நிலா - (Wiki group separates like this) கொலைத் தன்மை தங்கிய

வாளி - அம்புக்கு

அஞ்சேன் - அஞ்ச மாட்டேன்

கூற்றுவன் - எமனது சீற்றம்

நீள்நிலா - நீண்ட பிறையாகிய

அணியினானை - அணிகலத்தையுடைய சிவபெருமானை

நினைந்து - எண்ணி

நைந்து உருகி - கசிந்து உருகி

நெக்கு - நெகிழ்ந்து

வாள் நிலாம் - ஒளி பொருந்திய

கண்கள் - விழிகளில்

சோர - ஆனந்தக் கண்ணீர் பெருக

வாழ்த்தி நின்று - துதித்து நின்று

ஏத்த மாட்டா - புகழ மாட்டாத

ஆண் அலாதவரைக் கண்டால் - ஆண்மையுடையரல்லாரைக் காணின்

அம்ம - ஐயோ/ கடவுளே!!

நாம் அஞ்சும் ஆறு - நாம் அஞ்சுகின்ற வகை சொல்லும் அளவன்று.

Note: 'aaru' meaning 'alavillaadhadhu' .. thats why we call 'river' as 'aaru'


விளக்கவுரை:
இறைவனது திருவடிவத்தை நினைந்து பேரின்பத்தில் திளைத்திராதவரைக் காணின் அஞ்ச வேண்டும் என்றார்.

இப்பாடலிலேயே (புற்றில் வாள்..) 'நீணிலா அணியினானை நினைந்து நைந்துருகி நெக்கு வாணிலாங் கண்கள் சோர வாழ்ந்தநின்றேத்த மாட்டா' என்ற வரிகள் என்னை மிகவும் பிடித்த (பாதித்த) ஒன்று. காரணம், இளையராஜா அவர்கள், இங்கு எவரையும் மயக்கும் இசை ஓன்றை இவ்வரிகளுக்கு அளித்துள்ளார்.


'வாணிலாங் கண்கள் சோர' - இவ்வரிகளின் ஆலாபனை, அதன் பொருளுக்கு எற்ப, கண்களில் நீர் கொண்டு வரும் சக்தி கொண்டுள்ளது.
மேலும் 'நினைந்து நைந்துருகி நெக்கு' இவ்வரியை கவனியுங்கள்.. அது 'நினைந்து நினைந்து உருகி நெக்கு ' அல்ல. அப்படி இருந்திருந்தால் அது வெறும் அடுக்குத்தொடராக மட்டுமே இருந்திருக்கும் (ஈர்கும் சக்தியைப் பெறாது).
ஆனால் மாணிக்கவாசகரோ 'நினைந்து, நைந்து (கசிந்து), உருகி, நெக்கு (நெகிழ்ந்து)' என்று கூறுகிறார். மனதை உருக்க என்ன பொருத்தமான வார்த்தைப் ப்ரயோகம்!! இதை இசையோடு கேட்கும் போது நம்மை நிச்சயம் உருக்கும் சக்தியைப் பெருகிறது.

திருச்சிற்றம்பலம்!!

(Dedicated to Lord Shiva - The MAN of Revered hall of consciousness Chidambaram. In Chidambaram, a dance contest between Kali and Nataraja was held. Nataraja performed Urthuvathandavam and won. )

முற்றும்.

7 comments:

Anonymous said...

Priya Chancey illai ! Superb !

Keep up the good work going.

-Vasu

P B said...

very standard..romba nalla iruku.

Maayaa said...

Thanks vasu and pb

expertdabbler said...

it was kinda apt that you chose to reveal yourself with this. figuratively and literally... :)

Maayaa said...

haahaa.. okay.

aana ivlo naal 50kbla en photova sinnadhu panna theiryaama thindadinadhu thaan unmai..

otherwise its just coincidental pk!!!

Maayaa said...

It is called as just 'thiruvasagam'
in symphony music

thanks for the compliment uma!!

RaguC said...

என்னை மயக்கிய வரிகளுக்கு அர்த்தம தெரியாமல் இருந்தேன், இன்று அறிந்தேன், உணர்ந்தேன், ஆனந்த கண்ணீர் சொரிந்தேன். நல்ல முயற்சி, உங்களிடம் நல்ல தமிழ் இருக்கிறது, எல்லா திருவாசக பாடலுக்கும் அர்த்தம எழுதினால் நன்றாக இருக்கும்.